February 20, 2016

மறைமலையடிகள் சொற்பொழிவு போட்டி' 2015- பரிசளிப்பு

அன்புள்ளங்களுக்கு,
”மகிழ்ச்சியுரை” smile emoticon smile emoticon
தமிழ்க்குடில் அறக்கட்டளை நிர்வாகியின் அன்பு வணக்கம்.
மறை. திரு. தாயுமானவன் அவர்கள் எழுதிய மறைமலை அடிகளாரின் பன்முகப்பார்வை நூல் திறனாய்வு விழா 2016 பிப்ரவரி மாதம் 2ந்தேதி சென்னை எஸ்பிளனேடு YMCA அரங்கத்தில் வழங்கப்பட்டது. திருமதி. விமலா மறைக்காடன் அவர்கள் தலைமை தாங்க பேராசிரியர் வாணி அறிவாளன் அவர்கள் நூல் திறனாய்வு செய்து உரையாற்றினார். உயர்திரு மறைமலை இலக்குவனார் அவர்கள் வரவேற்புரையாற்ற மறை தாயுமானவன் அவர்கள் ஏற்புரையாற்ற எளிமையாகவும் மிகச்சிறப்பாகவும் நிகழ்ந்தது விழா.
ஜூலை மாதம்’2015 மறைமலையடிகளாரின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்திய சொற்பொழிவு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வெற்றியாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
அடிகளார் பற்றிய சொற்பொழிவு போட்டிக்கு அவரது பேரன் மறை. திரு. தாயுமானவன் அவர்கள் நடுவராக இருந்து சிறந்த படைப்பினைத் தேர்வு செய்து வழங்கினார். அடிகளாரின் நூல் திறனாய்வு விழாவில் போட்டிக்கான பரிசு வழங்கியது வெற்றியாளர்களுக்கு மட்டுமின்றி நம் தமிழ்க்குடிலுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியே. நூல் திறனாய்வு விழா மேடையில் நம் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் பரிசளிப்பையும் நடத்திக்கொடுத்த மறை திரு. தாயுமானவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விழாவில் வரவேற்புரையாற்றி, விழாவினைத் தொகுத்து வழங்கிய உயர்திரு மறைமலை இலக்குவனார் அவர்கள் நம் தமிழ்க்குடிலை அறிஞர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தவும் செய்தார். நம் தமிழ்க்குடிலின் தொடர்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடும் நம் நிர்வாகத்தின் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் அற்புத மனிதர். தம் அனுபவக்கடலில், முத்துக்களாய் அவர் கண்டெடுத்த அறிஞர்களை நமக்கு அறிமுகப்படுத்தி தொடர்ந்து ஊக்கமளித்து வரும் ஐயா மறைமலை அவர்களுக்கு தமிழ்க்குடில் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினையும், மகிழ்ச்சியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மறைமலையடிகளார் சொற்பொழிவு போட்டி
முதல் பரிசு ஸ்டெல்லா தமிழரசி ர. - சென்னை
இரண்டாம் பரிசு ஸ்ரீ வித்யா - சென்னை
தமிழ்க்குடிலின் தொடர்ந்த செயல்பாடுகளில் தங்களை இணைத்துக்கொண்டு தங்கள் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் வழங்கி வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நன்றி.
குறிப்பு: காமராஜர் அவர்களின் பிறந்ததின கட்டுரைப்போட்டி மற்றும் மகாகவி அவர்களின் பிறந்ததின கவிதைப்போட்டிக்கான பரிசளிப்பு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி.

என்றென்றும் அன்புடன் தமிழ்க்குடில் :)

No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_