December 08, 2015

அவசரத்தேவை...கடலூர்


அன்புத்தோழமைகளுக்கு கடந்த ஒரு வாரகாலமாக கடலூர் கிராமத்தில் தங்கியிருந்து 
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு களப்பணியாற்றியும் இதுவரை உதவிகள் சென்றடையாத இடங்களைப் பார்வையிட்டு பட்டியலிட்டு அவர்களுக்கு உதவிகள் கிட்ட வழிவகுத்து வருகிறது நம் தமிழ்க்குடில் குழுமம்.

ஒரு கிராமத்தைப் பார்வையிட்டு அந்த கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மட்டும் இனம்கண்டு, விதவைகள், தினசரி கூலிக்கு தற்சமயம் செய்யமுடியாது பாதிக்கப்பட்டோர் என முன்னுரிமையளித்து #கடலூருக்கு‬ நிவாரணப்பொருள் ஏற்றிவரும் அன்பர்கள் தெரிவித்தால் இதுவ்ரை உதவிகள் சென்றடையாத கிராமங்களை அடையாளம் காட்டி அங்கு சென்று பொருட்களை வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லாது கடலூர் இளைஞர்களை அங்கங்கு குழுவாக பிரித்து பாதுகாப்பாக உரிய கிராமத்தில் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலூரிலிர்ந்து சுமார் 3 கிமீ அருகில் உள்ள காரைமேடு பகுதியைச்சார்ந்த 3 கிராமங்களுக்கு உடனடி உதவிகள் தேவைப்படுகின்றன. இதுபோல் நம் குழுவினரால் ஆய்வுசெய்யப்பட்ட பல கிராமங்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன.
பால்பவுடர்
அரிசி / உணவு சமைக்கத்தேவையான பொருட்கள்
பாய்/போர்வை
தார்பாலின்
பிஸ்கட்
உதவி செய்ய விரும்பும் அன்புள்ளங்களும், நிவாரணப்பொருட்களை கடலூருக்கு எடுத்துவரும் நட்புகளும் தொடர்புகொள்ளவேண்டுகிறோம். பொருட்களை சரியான நபருக்கு வழங்கிட நம் குழு மூலம் தங்களுக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளோம்.
உங்களின் ஒவ்வொரு சிறுதுளியும் எங்கோ இருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்குப் பயன்படும் என்பதால் தங்களுடைய ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டுகிறோம்.  நம் பயணத்தில் தொடர்ந்து கரம் கோர்த்து வரும் அனைவருக்கும் நன்றியும், மகிழ்ச்சியும்.

என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில்"

4 comments:

  1. தங்களின் தொண்டுகளுக்கு எமது வாழ்த்துகள் தோழரே...
    - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி தோழர். :)தமிழ்க்குடிலோடு தொடர்ந்து இணைந்திருங்கள். :)

      Delete
  2. சிறந்த சேவைகள் தொடரட்டும் மனிதாபிமானப் பணி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சிதோழர். :)தமிழ்க்குடிலோடு தொடர்ந்து இணைந்திருங்கள். :)

      Delete

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_