December 05, 2015

கடலூர் நிவாரணப்பணி - சர்வராஜன்பேட்டை


நேற்று(04.12.15) கடலூர் சென்று ‪#‎உட்புற‬ கிராமங்களான சோழவெளி, நெல்லிக்குப்பம், போன்ற கிராமங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொண்ட நமது குழுமம் அதன் தொடர்ச்சியான  பணிகளை இன்று காலை நிறைவுசெய்து தற்சமயம் வீராணம் நோக்கிப் பயணித்தது. 
சர்வராஜன்பேட்டையின் சுமார் 700 குடும்பங்கள் பயன் பெரும்வகையில் நிவாரணப்பொருட்களை  கன்னியாகுமரி நண்பர்கள் வழங்கினார்கள்.  நம் தமிழ்க்குடில் வழிகாட்டியும், உதவியும் வழங்கியது.  அதைத்தொடர்ந்து வீராணம் ஏரிக்கரைப் பகுதி கிராமங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றது.  தமிழ்க்குடிலின் அடுத்த கட்டப்பயணம் நாளை. 

என்றென்றும் அன்புடன் தமிழ்க்குடில்

No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_