December 04, 2015

கடலூர் களப்பணியில் - தமிழ்க்குடில்.

அன்புத்தோழமைகளுக்கு,
நமது தமிழ்க்குடில் குழு இன்று நிவாரணப்பொருட்கள் வழங்கிட கடலூர் மாவட்டம் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டது. நெல்லிக்குப்பம் கிராமத்தையொட்டி சோழவெளி, திடீர் குப்பம், திருக்கண்டேஸ்வரம், தமிழ்குச்சிப்பாளையம் ஆகிய நான்கு கிராமங்களுக்கும் சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிடும் அளவு உணவுப்பொருட்களான அரிசி, எண்ணெய், பருப்பு, பிஸ்கட், கொசுவர்த்தி சுருள், மெழுகுவர்த்தி, அத்தியாவசியத்தேவையான மருந்துப்பொருட்கள் மற்றும் துணிகள் வழங்கியது. அந்த கிராமத்தைப் பார்வையிட்ட நமது குழு எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.






இன்று தமிழ்க்குடில் அறக்கட்டளை குழு கடலூர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும்வகையில் அவர்களை சந்தித்து தேவையான உதவிகளை செய்தது.
அரிசி
பருப்பு
எண்ணெய்
பால்
கொசுவர்த்தி
மெழுகுவர்த்தி,தீப்பெட்டி
உடை
பிஸ்கட்
ப்ரெட்
மருந்துகள்
ஆகிய பொருட்களை கொடுத்தது. களப்பணியில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்ட அன்புத்தம்பி பிரியன் கண்ணன் தம்பி Mahendiran Mahe 
தமிழ்க்குடில் அறக்கட்டளையின் நிர்வாகி தோழர் Thamizhk Kaathalan Thamizhkkaathalan மற்றும் உடன் களப்பணியாற்றிய நண்பர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளும், உளமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மருத்துவ உதவி, பொருளதவி நிதியுதவி அளித்த அனைத்து தோழமைகளுக்கும் உளமார்ந்த மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நமது அடுத்த கட்ட களப்பணி எங்கு என்பது பற்றியவிவரம் விரைவில் பகிர்கிறோம். எங்களின் நம்பிக்கையான செயல்பாட்டிற்குத் தங்களின் தொடர்ந்த ஊக்கமே காரணம். 
என்றென்றும் அன்புடன்
தமிழ்க்குடில் :)
smile emotico

No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_