May 23, 2015

தமிழ்க்குடில் அறக்கட்டளை 4ஆம் ஆண்டு துவக்கம்.


தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்புவணக்கம்.  __/\__ :) :)

நம் தமிழ்க்குடில் அறக்கட்டளை துவங்கப்பட்டு (21.05.15) மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து  22.05.2015 அன்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.  தங்களின் தொடர்ந்த ஒத்துழைப்பிற்கும், இடைவிடாத ஊக்கத்திற்கும், பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றியினை நெகிழ்வுடன் நவில்கின்றோம். தமிழ்க்குடிலின் செயல்பாடுகள் தொடர்ந்திடவும், சிறப்பாக செயலாற்றிடவும் வெற்றிப்படிகளாக அமைந்துவருவது தாங்கள் எங்களுக்கு அளித்துவரும் நம்பிக்கையும் தங்களின் பங்களிப்பும் என்பதில் ஐயமில்லை.  தாயின் கரம்பிடித்து செல்லும் குழந்தையாய் தமிழ்க்குடில் தங்கள் கரங்கள் பற்றிச்செல்கிறது.  குன்றாத தாயன்பாய் தாங்கள் நம் தமிழ்க்குடில் மீது தொடர்ந்து காட்டிவரும் அன்பிற்கு மகிழ்ச்சியும் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.  தமிழ்க்குடிலின் மலர்த்தோட்டத்தில் பூத்திருக்கும் மலர்கள் தொடர்ந்து மணம்வீசி மனம் மகிழ்ந்திட வாழ்த்துகள்.  :) :) 

என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில் அறக்கட்டளை.

2 comments:

  1. தங்கள் நற்பணி தொடர நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றியும், மகிழ்ச்சியும். :)

      Delete

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_