November 27, 2015

கட்டுரைப்போட்டி, சொற்பொழிவு போட்டி முடிவுகள்.

அன்புள்ளங்களுக்கு,
தமிழ்க்குடில் அறக்கட்டளை நிர்வாகியின் அன்பு வணக்கம்.
ஜூலை மாதம்’2015 மறைமலையடிகளாரின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்திய சொற்பொழிவு போட்டி மற்றும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு கட்டுரைப்போட்டியின் முடிவுகளை தங்களிடம் பகிர்வதில் மகிழ்வடைகிறோம்.
போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்துக்கொள்கிறோம். வெற்றிபெற்றவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை நிர்வாகத்தின் சார்பாகவும், நடுவர் மறை. தி. தாயுமானவன்(தவத்திரு மறைமலையடிகளார் அவர்களின் பேரன்) அவர்களின் சார்பாகவும், நம் தமிழ்க்குடில் அங்கத்தினர்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்.
முடிவுகளை அறியும் முன்பு போட்டிகளின் வெற்றியாளர்களைத் தேர்வு செய்த நடுவர் அவர்களைப் பற்றி தங்களுக்காக சிலவரிகள்.
”உயர்திரு மறை. திரு. தாயுமானவன்” அவர்கள் தவத்திரு மறைமலையடிகளார் அவர்களின் பேரன் என்பதில் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே. இவர் நடுவனரசு பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தில்((Combat Vehicles Research Development Establishment Min-of-Defence ) பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் மொழி நலன்களைமுதன்மையாகக் கொண்டு பாடுபடும் தமிழ்த்தொண்டர். அடிகளாரின் கொள்கைகளில் பெரிதும் ஈர்க்கப்பட்டு எழுத்திலும், பேச்சிலும் தனித்தமிழை பயன்படுத்துபவர். ”மறைமலையடிகளாரின் நோக்கில்” உடல்நலம் என்னும் தலைப்பினை ஆய்வுப்பொருளாகக் கொண்டு ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர்(எம்.பில்) பட்டம் பெற்றுள்ளார். அடிகளாரது வாழ்வில் நடைபெற்றௌ இன்றியமையாத செய்திகள் கடிதங்கள் இவற்றை உள்ளடக்கி “தனித்தமிழ் இயக்கத்தந்தை மறைமலையடிகளார்” என்னும் நூலை எழுதியுள்ளார். இவரது சமூகப்பணி மற்றும் தமிழ்ப்பணிகளுக்கிடையில் நம் தமிழ்க்குடிலின் வேண்டுகோளை ஏற்று சிறந்த பரிசுக்குரிய படைப்புகளைத் தேர்வு செய்து தந்தமைக்கு மனமார்ந்த நன்றியினை நிர்வாகம் சார்பாகவும் உங்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பரிசு பெற்றவர்கள் விவரம்
கட்டுரைப்போட்டிமுதல் பரிசு கி. மகாலட்சுமி - சேலம்
இரண்டாம் பரிசு ச. பொன்முத்து - சென்னை
மூன்றாம் பரிசு ’பரிவை’ சே. குமார்
மறைமலையடிகளார் சொற்பொழிவு போட்டிமுதல் பரிசு ஸ்டெல்லா தமிழரசி ர. - சென்னை
இரண்டாம் பரிசு ஸ்ரீ வித்யா - சென்னை
தமிழ்க்குடிலின் தொடர்ந்த செயல்பாடுகளில் தங்களை இணைத்துக்கொண்டு தங்கள் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் வழங்கிட வேண்டுகிறோம். டிசம்பர் மாதம் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு கவிதைப்போட்டி நடைபெறவுள்ளது. அனைவரும் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். விவரம் விரைவில் தெரியப்படுத்தவிருக்கிறோம். நன்றி
என்றென்றும் அன்புடன் தமிழ்க்குடில்

No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_