December 11, 2014

கவிதை போட்டி- மூன்றாவது பரிசு கவிதை

என்னுடைய பங்கு(புதுக்கவிதை) - பிரசன்னா தமிழ்
கண் முன் 
நடக்கும் அவலத்தை எழுத்து மூலமாக 
தட்டிக் கேட்க
இயலாத போது
கை இழந்த
ஊமை ஊனமாய் 
உணர்கின்றேன்
என்னிடம் பிச்சை 
வாங்கி 
அருகில் இருப்பவரிடமும் 
வாங்கும் போது
அவருடைய
இல்லாமையை 
போக்க இயலாத 
பிச்சைக்காரனாய் 
உணர்கின்றேன்
இந்த 
உலகில் 
யார் கொல்லப்பட்டாலும் 
யார் வன்புணர்வு
செய்யப்பட்டாலும் 
அந்த குற்றவாளி 
நான்தான் என்று 
உணர்கின்றேன்

இந்த சமூகத்தின் 
மெளன சப்தத்தில் 
என் குரலும் 
மெளனமாக 
இருப்பதால் ...

No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_