August 20, 2013

பொதுத்தொண்டு குழு உறுப்பினர்கள் தேர்வு


அன்பு சொந்தங்களுக்கு வணக்கம்... 

தமிழ்க்குடில் அறக்கட்டளை  தனது செயல்திட்டங்களை தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கிராமங்களில்  நிறைவேற்றப்  பொதுத்தொண்டு குழு உறுப்பினர்களைத் தேர்வுசெய்து வருகிறது.  

தமிழ் மீதும், தமிழர் மீதும் அக்கறையும், சமூக ஆர்வமும் உடைய தோழமைகள் சமுதாயப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விருப்பமிருப்பின் உடனடியாக தமிழ்க்குடிலின் நிர்வாகத்திற்கு தங்கள் விருப்பத்தையும், பெயர்,அலைபேசி, மின்னஞ்சல், முகவரி,தங்கள் ஆர்வம், பணி மற்றும் சமூக ஈடுபாடு போன்ற தங்களைப் பற்றிய சிறு குறிப்புகளையும் tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரியப்படுத்தவும்.  தங்களிடமிருந்து பெறப்படும் அனைத்து விவரங்களும் பாதுகாப்பாக வைக்கப்படும் என உறுதியளிக்கிறோம்.

தங்களைப்பற்றிய விவரங்களை இந்த இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும்  சமர்ப்பிக்கலாம்.

https://docs.google.com/spreadsheet/viewform?formkey=dHZlOVFlN0JWQ3VzbmxVVVVBNmdpUVE6MQ#gid=0

அன்புடன்
தமிழ்க்குடில் அறக்கட்டளை.

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!! வெல்க தமிழ்!!!



2 comments:

  1. புதிய அறக்கட்டளை துவங்கியுள்ளது கேட்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். வெற்றிய்டைய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா..தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி. தங்களின் வாழ்த்து நம் செயல்பாடுகளை சிறக்க செய்யட்டும். தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறோம். _/\_

      Delete

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_